4 புலிகள் 3 சிங்கங்ளுக்கு கொரோனா : அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் தொற்று!

 

4 புலிகள் 3 சிங்கங்ளுக்கு கொரோனா : அமெரிக்காவில்  அசுர வேகத்தில் பரவும் தொற்று!

கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 7 பூனைகளுக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் பாராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி  நடியா என்ற புலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

tt

இந்நிலையில் தற்போது  இந்த உயிரியல் பூங்காவில் மேலும் 4 புலிகள் மற்றும் 3 ஆப்பிரிக்க சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 7 பூனைகளுக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. 

tt

பூங்கா பராமரிப்பு ஊழியர்களால் விலங்குகளுக்கு கொரோனா நோய் பரவியிருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் விலங்குகளுக்கு இனியும் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.