4 ஆண்டுகளாக காதலித்து விட்டு ஏமாற்றிய காதலன்: கம்பி எண்ண வைத்த காதலி!

 

4 ஆண்டுகளாக காதலித்து விட்டு ஏமாற்றிய காதலன்: கம்பி எண்ண வைத்த காதலி!

பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. 

சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் விஷ்ணுகுமரன். 24 வயதான இவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு அங்குள்ள  பெட்ரோல் பங்க் ஒன்றில் எந்திர சர்வீஸ்  பிரிவில் பணியாற்றி வருகிறார். 

இதனிடயே விஷ்ணுகுமரனுக்கும், கந்தம்பட்டியை சேர்ந்த எம்.காம் பட்டதாரியான 23 வயதான சுபத்ரா என்ற பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. 

ttt

இருப்பினும் கடந்த சில மாதங்களாக விஷ்ணு சுபத்ராவின்  அழைப்புகளை எடுக்கவில்லை. அதே சமயம் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதும் தெரியவந்துள்ளது. இதனால் விஷ்ணுவை அவர் வேலைபார்க்கும் இடத்தில் வைத்து சந்தித்த சுபத்ரா இதுகுறித்து கேட்டுள்ளார். 

அதற்கு விஷ்ணு ஆமாம் எனக்கு திருமணம் நடக்க உள்ளது.  நடந்தவற்றை ஒரு கனவாக நினைத்து மறந்து விடு என்று கூறியுள்ளார். 

ttt

இந்நிலையில் இதுகுறித்து  சுபத்ரா தன்னை திருமணம் செய்துகொள்வாதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக விஷ்ணுகுமார் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.  புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.