4வது டெஸ்ட் போட்டி தோல்வி: விரும்பிய தொடக்கம் கிடைக்கவில்லை – விராட் கோலி ஆதங்கம்

 

4வது டெஸ்ட் போட்டி தோல்வி: விரும்பிய தொடக்கம் கிடைக்கவில்லை – விராட் கோலி ஆதங்கம்

சவுதாம்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விரும்பிய தொடக்கம் கிடைக்கவில்லை என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான டி20தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 3-வது டெஸ்டில் இந்தியாவும்வெற்றி பெற்றன.

இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதோடு, டெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில்“இந்த டெஸ்டில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருப்பதாக முந்தைய நாள் இரவில் நினைத்தேன். ஆனால் நாங்கள் விரும்பிய மாதிரி தொடக்கம் கிடைக்கவில்லை. பந்து வீச்சில் இங்கிலாந்து அணியினர் எங்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர். இதனால் எல்லா பெருமையும் இங்கிலாந்து வீரர்களையே சாரும். கடினமான சூழலில் எங்களை விட அவர்கள் துணிச்சலாக செயல்பட்டனர். 2-வது இன்னிங்சில் அவர்களின் பேட்டிங் சிறப்பாக இருந்ததுஇதனால் வெற்றி இங்கிலாந்து அணியின் வசமானது” என்று தெரிவித்தார்.