சீமான் பின்னால் இருக்கும் மர்ம ரகசியத்தை..நாம் தமிழர் கட்சி 3வது பெரிய கட்சியா? வெடிக்கும் கே.எஸ்.அழகிரி

 

சீமான் பின்னால் இருக்கும் மர்ம ரகசியத்தை..நாம் தமிழர் கட்சி 3வது பெரிய கட்சியா? வெடிக்கும் கே.எஸ்.அழகிரி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக வாக்கு சதவிகித அடிப்படையில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. 6.85 சதவிகித வாக்குகளுடன் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. இக்கட்சிக்கு 29,58,458 வாக்குகள் கிடைத்துள்ளன. 234 தொகுதிகளில் 173 தொகுதிகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 3வது இடத்தை பிடித்துள்ளனர். இதையடுத்து சீமானுக்கும், அவரது கட்சி வளர்ச்சிக்கும் பலரும் வாழ்த்து சொல்லிவருகின்றனர்.

சீமான் பின்னால் இருக்கும் மர்ம ரகசியத்தை..நாம் தமிழர் கட்சி 3வது பெரிய கட்சியா? வெடிக்கும் கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ், மதிமுக, பாமக, தேமுதிக, விசிக என்று பல கட்சிகள் இருக்கும் நிலையில் நாம்தமிழர் கட்சி 3வது இடம் பிடித்துள்ளதால் சிலர் சர்சை கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘’தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாகக் காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 25 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் 72 சதவிகித வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியா? ஒரு தொகுதியில் சராசரியாக 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கிய நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியா?’’ என்று கேட்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

சீமான் பின்னால் இருக்கும் மர்ம ரகசியத்தை..நாம் தமிழர் கட்சி 3வது பெரிய கட்சியா? வெடிக்கும் கே.எஸ்.அழகிரி

‘’ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.’’என்றும் சொல்லும் அழகிரி,

’’தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்து கொண்டு தெளிவு பெறுவார்கள்.’’என்கிறார்.