ஆபாசப்படம் எடுத்து பல பெண்களை ஏமாற்றிய காசி : 3ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல்!

 

ஆபாசப்படம் எடுத்து பல பெண்களை ஏமாற்றிய காசி : 3ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்களிடம் பேசி ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்த நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் காசி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கின் தீவிரத்தை உணர்ந்த கன்னியாகுமரி போலீசார், காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு கோரிக்கையை முன்வைத்தனர். அதன்படி, காசி வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.

ஆபாசப்படம் எடுத்து பல பெண்களை ஏமாற்றிய காசி : 3ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல்!

முதல் முதலில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் காசிக்கு எதிராக புகார் அளித்ததைத் தொடர்ந்து, பல பெண்கள் அவர் மீது புகார் அளித்தனர். விஐபிகள் சிலரின் மனைவிகள் உட்பட. நாகர்கோவில் காவல் நிலையம், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையம், நேசமணி நகர் காவல் நிலையம் என பல காவல் நிலையங்களில் காசிக்கு எதிராக புகார்கள் குவிந்தன. காவல் நிலையங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகள் குறித்து தனித்தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடிவெடுத்த சிபிசிஐடி போலீசார், அண்மையில் 400 பக்க அளவிலான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

ஆபாசப்படம் எடுத்து பல பெண்களை ஏமாற்றிய காசி : 3ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல்!

அதில் ஈவு இரக்கமின்றி காசி இளம் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், கொடூரமான முறையில் நடந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் கந்துவட்டி வழக்கில் காசிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், காசிக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் 3 ஆவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். நாகர்கோவிலை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பது போல் நடித்து வன்கொடுமை செய்ததாக பதிவான புகாரின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.