பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை !

 

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக  வருமான வரித்துறை சோதனை !

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக  வருமான வரித்துறை சோதனை !

இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு சொந்தமான 28 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் தினகரனுக்கு சொந்தமான கோவை சிறுவாணி ரோட்டில் காருண்யா பல்கலைக்கழகம், கோவை அம்மன்குளம் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள பள்ளி நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் வெளிநாடுகளிலிருந்து வரும் நிதிக்கு சரியான வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று இரண்டாவது தினமாக தினகரனுக்கு சொந்தமான கல்லூரி, பள்ளி ,அறக்கட்டளை, மருத்துவமனை ,நிறுவனங்கள், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் . அத்துடன் அவரது பல்கலைக்கழக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக  வருமான வரித்துறை சோதனை !

இந்நிலையில் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு முதலீடுகள், இந்திய முதலீடுகள் குறித்து பணபரிவர்த்தனை ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கனடாவில் உள்ள பால் தினகரனை இந்தியா வரவழைத்து சோதனை விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இயேசு அழைக்கிறார் அமைப்பின் வரி ஏய்ப்பு புகார் நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.