3rd billionth meal: பசுக்களின் பெருமை பற்றி பிரதமர் மோடி உரை

 

3rd billionth meal: பசுக்களின் பெருமை பற்றி பிரதமர் மோடி உரை

விருந்தாவன்: 3rd billionth meal விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பசுக்களின் பெருமை குறித்து பேசியிருக்கிறார்.

உத்தர பிரதேசம், அக்‌ஷய பாத்திரம் எனும் அரசு சாரா அமைப்பு நடத்திய 3rd billionth meal எனும் குழந்தைகளுக்கு உணவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், கால்நடைகளை பாதுகாக்க எங்கள் அரசாங்கம் பல்வேரு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ராஷ்திரிய கோகுல் மிஷன் மற்றும் ராஷ்திரிய காமதேனு அயோக் ஆகிய பசுப் பாதுகாப்பு திட்டங்களுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். பசுக்கள் நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.

மேலும் அவர், பசு நமக்களிக்கும் பாலுக்கு எந்த வகையிலும் நன்றிக் கடன் செலுத்த முடியாது. பசு வதை செய்பவர்களின் தூண்டுதல்களாலேயே வன்முறை வெடிக்கிறது என தெரிவித்தார்.