பெண்களின் வறுமையை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய கும்பல்… அதிர்ச்சி தரும் பின்னணி!

 

பெண்களின் வறுமையை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய கும்பல்… அதிர்ச்சி தரும் பின்னணி!

சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரும் இவரின் நண்பர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வறுமையில் வாடும் பெண்கள், கணவனை இழந்தவர்கள் போன்ற பெண்களை குறிவைத்து அவர்களுக்கு பண ஆசையை காட்டி பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்றுள்ளனர். மேலும் இவர்களின் ஆபாச படங்களை எடுத்து மிரட்டி வந்த இந்த கும்பல் இந்த பெண்களை வைத்து சில தொழிலதிபர்களையும் வலையில் வீழ்த்தி ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பெண்களின் வறுமையை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய கும்பல்… அதிர்ச்சி தரும் பின்னணி!

இந்த விவகாரத்தில் சில பெண்கள் போலீசில் புகார் கொடுக்க, புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பெண்களின் வறுமையை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய கும்பல்… அதிர்ச்சி தரும் பின்னணி!

இதில் லோகநாதன் மட்டுமல்ல அவரின் மனைவி, தந்தை உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளது தெரியவந்தது. தற்போது லோகநாதனின் தந்தை ரகுவிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் லோகநாதனின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். பெண்களையும் தொழிலதிபர்களையும் ஆபாசமாக வீடியோ எடுத்த செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், இதில் வேறு யார் யார் சம்மந்தப்பட்டு உள்ளார்கள் என்று தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இதுவரை இந்த கும்பலால் 6 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சேலம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.