ஈரோடு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – 3 பேர் கைது

 

ஈரோடு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – 3 பேர் கைது

ஈரோடு அருகே கூலிப்பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் வீரப்பன்(19). இவர் கடந்த ஒன்றரை மாதமாக ஈரோடு மோளகவுண்டம் பாளையத்தில் உள்ள அத்தை வீட்டில் தங்கி சென்ட்ரிங் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

ஈரோடு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – 3 பேர் கைது

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கூலி பணம் பிரிப்பது தொடர்பாக வீரப்பனுக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீ்ட்டிலிருந்து சென்ற வீரப்பன், அதே பகுதியில் உள்ள குட்டையில் உடலில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

ஈரோடு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை – 3 பேர் கைது

இதைத்தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய ஈரோடு தாலுகா போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அதேபகுதியை சேர்ந்த சக்திவேல், திருநாவுக்கரசு, கோகுல கிருஷ்ணன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது, கூலி பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வீரப்பனை கட்டையால் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.