அரியலூர்: தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு
Oct 30, 2020, 12:28 IST1604041124000
அரியலூர் நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 3 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 8ஆம் தேதி அரியலூர் நகரில் உள்ள சைக்கிள் எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில், ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வராஜ், கடலூரை சேர்ந்த சிவப்பிரகாசம் ஆகியோரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவர்கள் மூவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், 3 பேரையும் அரியலூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் ரத்னா நேற்று அதிரடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்