39 தொகுதிகள் ;1237 வேட்புமனுக்கள் – நேற்றுடன் முடிந்த வேட்பு மனுத் தாக்கல்

 

39 தொகுதிகள் ;1237 வேட்புமனுக்கள் – நேற்றுடன் முடிந்த வேட்பு மனுத் தாக்கல்

நாட்டின்  17 – ஆவது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 – ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்க இருக்கிறது.

நாட்டின்  17 – ஆவது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 – ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்க இருக்கிறது.

வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது 

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அன்றே நடைபெற இருக்கிறது.

election

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், வேட்புமனுத்தாக்கல் செய்ய மார்ச் 26 –  ஆம் தேதி (நேற்று) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள்.

எத்தனை பேர் ?

நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1237 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 1099 பேரும், பெண்கள் 136 பேரும், திருநங்கைகள் 2 பேரும் அடங்குவார்கள். அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதிக்கு 62 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக தென்காசி தொகுதிக்கு 11 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

election

இதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 486 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 412 பேரும், பெண்கள் 74 பேரும் அடங்குவார்கள். அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதிக்கு 68 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக மானா மதுரை தொகுதியில் 9 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பரிசீலனை 

மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் 29-ந் தேதி (நாளை மறுநாள்) மாலை 3 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. முறையாக கையெழுத்து போடப்பட்டு ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்.

 

இதையும் படிங்க :

ஓட்டுப் போட சொல்லும் எங்களுக்கே ஓட்டு இல்லை – புலம்பும் தேர்தல் பணியாளர்கள்

தேர்தலுக்கு வாங்கப்பட்ட மை பாட்டில்களுக்கு ஆன செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?