38- ஐ தொட்ட கவர்ச்சி புயல்: குவியும் மச்சான்ஸ் வாழ்த்து!

 

38- ஐ தொட்ட கவர்ச்சி புயல்: குவியும் மச்சான்ஸ் வாழ்த்து!

கோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த நடிகை நமீதா இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சென்னை:  கோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த நடிகை நமீதா இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

‘மச்சான்’ என்ற மந்திர வார்த்தையால் தமிழ் மக்களின் உள்ளத்தைத் தொட்டவர் நடிகை நமீதா. குஜராத் மாநிலம் சூரத் இறக்குமதியான நமீதா ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஒல்லியான உருவம், உயரம், கவர்ச்சி என முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட பல படங்களில் நாயகியாகவும் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார். அதனால் தான் குஷ்பூவை தொடர்ந்து நடிகை நமீதாவுக்கும் கோயில் கட்டி அழகு பார்த்தார்கள் அவரது ரசிகர்கள். 

namitha

இருப்பினும் சமீபத்தில் பிக் பாஸில் போட்டியாளராகப் பங்கேற்றதால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது. ரசிகர்கள் மத்தியில் புகழின் உச்சியில் இருந்த நமீதா கிசுகிசுகளிலும் சிக்கினார். சரத்குமாருடன் கிசுகிசுக்கப்பட்ட நமீதா நடிகர் சரத்பாபுவை திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும்,  விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்தி பரவி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

namitha

இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில்  தனது நீண்டநாள் காதலரான வீரா என்பவரை சமீபத்தில் திருமணம்  செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

namitha

இந்நிலையில் நடிகை நமீதா தன்னுடைய 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கவர்ச்சி பிடியில் ரசிகர்களை கட்டிவைத்துள்ள இந்த சூரத் புயலுக்கு அவருக்கு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது திரையுலகைச் சேர்ந்த அவரது நண்பர்களும் வாழ்த்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.