கொரோனாவின் கோரத்தாண்டவம்..சென்னையில் 36 வயது பெண் உயிரிழப்பு!

 

கொரோனாவின் கோரத்தாண்டவம்..சென்னையில் 36 வயது பெண் உயிரிழப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் லட்ச கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,000 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கொரோனாவில் இருந்து 48,534க்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கொரோனாவின் கோரத்தாண்டவம்..சென்னையில் 36 வயது பெண் உயிரிழப்பு!

இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் 2ஆம் இடத்தில் இருக்கும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967ஐ கடந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள ராயபுரம், திரு.வி.க நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 36 வயது பெண் உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ராயபுரத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.