3,500 கோடிகள் முதலீடு! முதல்வரைச் சந்தித்த துபாய் பிரதிநிதிகள்!

 

3,500 கோடிகள் முதலீடு! முதல்வரைச் சந்தித்த துபாய் பிரதிநிதிகள்!

தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு அழைப்பு விடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்றிருந்தார். அப்போது துபாயில் சுமார் ரூ.4,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழகத்தில் தொழில் துவங்குவதற்காக போடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் துபாய் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 

தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு அழைப்பு விடுப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்றிருந்தார். அப்போது துபாயில் சுமார் ரூ.4,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழகத்தில் தொழில் துவங்குவதற்காக போடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் துபாய் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 

edapadi

தமிழகத்தில் என்ன தொழில் துவங்கலாம், முதலீடு தொகை எவ்வளவு, வேலை வாய்ப்புகள் எத்தனைப் பேருக்கு என்று இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வருடனான இந்த சந்திப்புக்கு பின்னர் பேசிய துபாய் முதலீட்டாளர்கள், பயோடீசல், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி, வெளிநாடுகளில் வேலை பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தெரிவித்தனர். அடுத்த 3 மாதங்களில் தொழில் தொடங்குவதற்கான இடங்களைக் கண்டறிந்து 6 மாத காலத்திற்குள் தமிழகத்தில் தொழில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.