35 சவரன் நகை, 40 ஆயிரம் பணத்தையும் கொள்ளை அடித்த முகமூடி திருடன்!

 

35 சவரன் நகை, 40 ஆயிரம் பணத்தையும் கொள்ளை அடித்த முகமூடி திருடன்!

வங்கியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்த பெண்ணிடம் முகமூடி கொள்ளையன் பணத்தையும் நகையையும் திருடியுள்ளான்.

வங்கியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு வெளியே வந்த பெண்ணிடம் முகமூடி கொள்ளையன் பணத்தையும் நகையையும் திருடியுள்ளான்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள கனரா வங்கியில் இருந்து  35 சவரன் நகையும், 40 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து தனது இரு சக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். அதை பார்த்துக் கொண்டே இருந்த கொள்ளையன் 20 ரூபாயை கீழே போட்டு விட்டு இது உங்களுடையதா என்று கேட்டிருக்கிறான்.

Thief

அந்த பெண் கீழே குனித்து பார்க்கும் அந்த சிறு வெளியில் அந்த பெண்ணிடம் இருந்த பணத்தையும் நகையையும் கொள்ளையடித்து சென்றுவிட்டான் என தகவல்கள் வெளியாயின. இச்சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடன் முகத்தை மூடி இருந்ததால் அடையாளம் கொள்ள முடியாமல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.