33 வயதான பத்திரிகையாளர் தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

 

33 வயதான பத்திரிகையாளர் தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ஹைதராபாத்: 33 வயதான பத்திரிகையாளர் தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் 33 வயதான பத்திரிகையாளர் கொரோனா தொற்று காரணமாக நேற்று காலை ஹைதராபாத் அரசு காந்தி மருத்துவமனையில் இறந்தார். அந்த நிருபர் கடந்த ஜூன் 4-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த பத்திரிகையாளருக்கு டைப் -1 சுவாசக் கோளாறு மற்றும் கடுமையான சுவாச நோய் நோய்க்குறி (ஏ.ஆர்.டி.எஸ்) ஆகியவற்றுடன் நிமோனியாவும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்று காலை அந்த பத்திரிகையாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார். கடந்த ஒரு வாரத்தில் 13 ஊடகவியலாளர்கள் தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.