ஒரே நாளில் 3,207 பேர் பலி ; இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று!

 

ஒரே நாளில் 3,207 பேர் பலி ;  இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று!

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 3,207பேர் உயிரிழந்துள்ள நிலையில் தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஒரே நாளில் 3,207 பேர் பலி ;  இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று!

இந்தியாவில் ஒரே நாளில் 1,32,788 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.நேற்று முன்தினம் 1.52 லட்சம், நேற்று 1.27 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 1.32 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,81, 75,044 லிருந்து 2,83,07,832 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,31,456 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,59,47,629 லிருந்து 2,61,79,085 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 92.09% ஆக உள்ளது. அத்துடன் உயிரிழப்பு விகிதம் 1.18ஆக உள்ளது.

ஒரே நாளில் 3,207 பேர் பலி ;  இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று!

அதேபோல் இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 3,207பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் நேற்று 2700 பேர் பலியான நிலையில் இன்று மீண்டும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது.இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3,31,895லிருந்து 3,35,102 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17,93,645 ஆக குறைந்துள்ளது.