உத்தரபிரதேசத்தில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களால் பெண் பாலியல் வன்கொடுமை !!

 

உத்தரபிரதேசத்தில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களால் பெண் பாலியல் வன்கொடுமை !!

உத்தரபிரதேசத்தில் கோபிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் 32 வயது பெண் ஒருவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையான 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கோபிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் காவநிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் மே 10 ஆம் தேதி மரம் சேகரிக்கச் சென்றபோது போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் சோனு பிண்ட், தீபக் சிங், அச்சே லால் மற்றும் மாதவ் யாதவ் ஆகியோர் தன்னைத் தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தன்னையும் தன்னுடைய கணவரையும் கொன்றுவிடுவதாக கூறிவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். அதனால் நான் புகார் அளிக்க பயந்து கொண்டு இருந்தேன். என்னுடைய கணவரின் வற்புறுத்தலின் பேரில் தற்போது காவல்துறையை அணுக முடிவு செய்துள்ளேன் என கூறினார். இதையடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் தனது கணவருடன் தந்த புகாரில் குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.