புதுச்சேரியில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி.. அதிகரிக்கும் பாதிப்பு!

 

புதுச்சேரியில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி.. அதிகரிக்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதாவது, முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கடைகள் மற்றும் மதுக் கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி.. அதிகரிக்கும் பாதிப்பு!

அதேபோல உணவு விடுதிகளிலும் நேரக் கட்டுப்பாடுகளுடன் பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி கடற்கரைக்கு யாரும் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்படும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் படி, தற்போது முதல்வர் அறிவித்த கட்டுப்பாடுகள் அமலிலிருந்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

புதுச்சேரியில் நேற்று மேலும் 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1,011 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,041 ஆக உயர்ந்துள்ளது.