32 மாணவிகளை வேட்டையாடிய மனித மிருகங்கள்; ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

 

32 மாணவிகளை வேட்டையாடிய மனித மிருகங்கள்; ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலத்தில் மர்ம கும்பல் ஒன்று 32 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் மர்ம கும்பல் ஒன்று 32 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஸ்தலமான பவுத்ராம குகைக் கோயில் உள்ளது. விடுமுறை நாட்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். மற்றபடி வார நாட்களில் அங்கு பெரிய அளவில் ஆள் நடமாட்டம் இருக்காது.

எனவே, தனிமையில் இருக்க விரும்பும் காதல் ஜோடிகள் இங்கு வருகை புரிவது வழக்கம். இந்நிலையில், குகைக் கோயிலுக்கு நவீன் என்ற இளைஞர் தனது காதலியுடன் அங்கு சென்றுள்ளார். அவர்கள் இருவரும் அங்கு தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று நவீனை அடித்து விட்டு, இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், பொட்லூரி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பொட்லூரி தனது நண்பர்களான சோமய்யா, கங்கய்யா, நாகராஜு ஆகியோருடன் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 32 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் எனவும், அதில் 3 ஆண்களையும் ஒரு பெண்ணையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருமே 20 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.