ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது 31 ஆம் தேதி விசாரணை

 

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது 31 ஆம் தேதி விசாரணை

தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தடை தொடரும் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது 31 ஆம் தேதி விசாரணை

இந்த தீர்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஸ்டெர்லைட் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஸ்டெர்லைட் சிஇஓ தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், மதிமுக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆலையை மூடியது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வேதாந்தா நிறுவனத்தின் இந்த மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் வரும் 31ஆம் தேதி விசாரணை வரவுள்ளது.