“லிப்ட்ட கண்டுபிடிச்சது இதுக்குத்தானா ?”வாட்ச்மேன் செய்த வேலையை பாருங்க

 

“லிப்ட்ட கண்டுபிடிச்சது இதுக்குத்தானா ?”வாட்ச்மேன் செய்த வேலையை பாருங்க

ஒரு அபார்ட்மென்டில் வசிக்கும் குடியிருப்பு வாசியின் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த அபார்ட்மென்டின் செக்யுரிட்டியை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை கண்டிவ்லியில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் செல்வந்தர்களும் .அரசு அதிகாரிகளும் ,வியாபாரிகளும் வசித்து வந்தனர் .அங்கு இருக்கும் அனைத்து நுழைவு வாயில்களிலும் பல் வாட்ச்மேன்கள் பணிபுரிகின்றனர் .இப்படி ஆடம்பரமான இந்த அபார்ட்மெண்டில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அந்த அபார்ட்மென்ட் வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .
கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்த அபார்ட்மெண்ட்டின் ஒரு பிளாட்டில் வசிக்கும் எட்டு வயது சிறுமி கடைக்கு சென்றார் .அப்போது அந்த சிறுமி பொருட்களை வாங்கிக்கொண்டு அந்த அபார்ட்மென்ட்டின் லிப்ட்டில் போவதற்கு அதனுள்ளே போனார்.அப்போது அந்த லிப்ட்டில் ஏற்கனவே காத்துக்கொண்டிருந்த அந்த அபார்ட்மென்டின் 31 வயதான வாட்ச்மென் அந்த லிப்ட்டிற்குள் வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம் .
இதனால் அந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து வந்து இந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் தெரிவித்தார் .அவர் உடனே அந்த அபார்ட்மெண்ட் செக்ரெட்டரியிடம் இந்த விஷயத்தை கூற அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீசில் புகார் தெரிவித்தார்கள் .போலீசார் அந்த வாட்ச்மென் மீது வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்தார்கள் .போலீசார் மேற்கொண்டு அந்த அபார்ட்மெண்ட் வாட்ச்மேன்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் .பிறகு அங்குள்ள குடியிருப்பு வாசிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு சென்றார்கள் .

“லிப்ட்ட கண்டுபிடிச்சது இதுக்குத்தானா ?”வாட்ச்மேன் செய்த வேலையை பாருங்க