“பர்த் டே பார்ட்டி பலான பார்ட்டியானது” -வீட்டு ஓனரிடம் காருக்குள் சிக்கிய பெண்

 

“பர்த் டே பார்ட்டி பலான பார்ட்டியானது” -வீட்டு ஓனரிடம் காருக்குள் சிக்கிய பெண்

தன்னுடைய வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண்ணை அந்த வீட்டு உரிமையாளர் காரில் கூட்டி சென்று, பாலியல் வன்கொடுமை செய்த விஷயம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .


புனேவின் சகான் பகுதியில் சுரேஷ் சங்கர் என்ற 31 வயது நபர் திருமணமாகி நாலு வயது குழந்தைக்கு தந்தையாக இருக்கிறார் .அவர் வீட்டில் ஒரு பகுதியை ஒரு குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் .
அந்த வாடகை வீட்டில் 14 வயதில் ஒரு பெண் இருக்கிறார் .இந்த வீட்டு உரிமையாளர் சுரேஷ் சங்கர் தான் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டிற்கு அடிக்கடி தன்னுடைய நண்பரை பார்க்கும் சாக்கில் அந்த சிறுமியை பார்க்க போவாராம் .
கடந்த வாரம் ஒரு நாள் அவருக்கு பிறந்தநாளென்று அந்த சிறுமிக்கு ட்ரீட் தருவதாக கூறி தன்னுடைய காரில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் .அப்போது அந்த காரில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் பயந்து போன சிறுமி அந்த காரிலிருந்து பாதியிலேயே இறங்கி வீட்டிற்கு சென்றுள்ளார் .பிறகு வீட்டிற்கு சென்ற அவர் காரில் அந்த சுரேஷ் சங்கர் தன்னிடம் நடந்து கொண்ட விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த வீட்டு ஓனர் சுரேஷ் சங்கர் மீது போலீசில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை பிடித்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் .பிறகு அவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துஅவரை சிறையிலடைத்தார்கள் .

“பர்த் டே பார்ட்டி பலான பார்ட்டியானது” -வீட்டு ஓனரிடம் காருக்குள் சிக்கிய பெண்
Car thief at parking lot