கோட்டை பெருமாள் கோவிலில் 31 ஆயிரம் உண்டியல் காணிக்கை

 

கோட்டை பெருமாள் கோவிலில் 31 ஆயிரம் உண்டியல் காணிக்கை

கோட்டை பெருமாள் கோவிலில் ஸ்ரீவாரி உண்டியலில் பக்தர்கள் ரூ.31 ஆயிரம் காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.

கோட்டை பெருமாள் கோவிலில் 31 ஆயிரம் உண்டியல் காணிக்கை

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஸ்ரீவாரி உண்டியல் கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்று கோவில் நிர்வாகம் சார்பில் கோட்டை பெருமாள் கோவிலில் 3 இடங்களில் ஸ்ரீவாரி உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

கோட்டை பெருமாள் கோவிலில் 31 ஆயிரம் உண்டியல் காணிக்கை

இந்த உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தினேஷ்குமார் செயல் அலுவலர் கங்காதரன் முன்னிலையில் நடந்தது. இந்த மூன்று உண்டியலில் பக்தர்கள் ரூ. 31 ஆயிரத்து 124 காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

கோட்டை பெருமாள் கோவிலில் 31 ஆயிரம் உண்டியல் காணிக்கை

திருவிழா நன்கொடையாக ரூ.15 ஆயிரமும் சிறப்பு தரிசனம் கட்டணமாக ரூ 3, 380, கருட சேவை கட்டணம் ரூ 25 ஆயிரம் காணிக்கையாக வந்துள்ளது.