சென்னையில் ரூ.31.87 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

 

சென்னையில் ரூ.31.87 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

சென்னை

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வந்த 31 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னைக்கு வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமான பயணிகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த சென்னையை சேர்ந்த தமீம்அன்சாரி சம்சுதீன்(28) மற்றும் தஞ்சையை சேர்ந்த ஜபர்அலி அப்துல்வகாப்(48) ஆகியேரை தனியே அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.

சென்னையில் ரூ.31.87 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் – இருவர் கைது

அப்போது, அவர்கள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி உள்ளாடைக்குள் மறைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து சுமார் 31 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 621 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.