31 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியலாம்!

 

31 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியலாம்!

ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய லாம் என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

கொரொனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய லாம் என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

ttn

அந்த கடிதத்தில், 31 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்கள் 31 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய வேண்டும் என்றும் 2020 -21ஆம் ஆண்டிற்கான கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை தயார் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி அலுவலர்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும் பதில் அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் விடுக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.