வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் கும்பகர்ணன் – தூங்கும்போதே சாப்பாடு ஊட்டும் மனைவி

 

வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் கும்பகர்ணன் – தூங்கும்போதே சாப்பாடு ஊட்டும் மனைவி

ஆறு மாதம் சாப்பிடுவான். அடுத்த ஆறு மாதத்திற்கு தூங்குவான். இதுதான் ராமாயணத்தில் வரும் கும்பகர்ணனின் கதை. ஆனால், அந்த கும்பகர்ணனுக்கே அண்ணன் ஒருவரு இருக்கிறார். அவர் வருடத்தில் 65நாட்கள் மட்டுமே விழித்திருக்கிறார். 300 நாட்கள் தூக்கத்தில் இருக்கிறார். இப்படி ஒரு விநோத நோயினால் 23 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் புர்காராம்.

வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் கும்பகர்ணன் – தூங்கும்போதே சாப்பாடு ஊட்டும் மனைவி

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் அடுத்த நாகூரை சேர்ந்த புர்காராம்(42) பத்வா கிராமத்தில் பலசரக்கு கடை வைத்திருக்கிறார். இவர் மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்கிறார். மிச்ச 25 நாட்களும் வீட்டிலேயே தூங்கிக்கொண்டிருக்கிறார். தூக்கத்திலேயே இருக்கும் கணவருக்கு மனைவிதான் சாப்பாடு ஊட்டி வருகிறார். கடந்த 23 ஆண்டுகளாக இதே நிலை தொடர்கிறது.

வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் கும்பகர்ணன் – தூங்கும்போதே சாப்பாடு ஊட்டும் மனைவி

எப்போதும் கணவன் தூங்கிக்கொண்டே இருந்ததால் அவரை கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டரிடம் அழைத்து சென்று காட்டியிருக்கிறார். அப்போதுதான் அவர் ‘ஆக்சிஸ் ஹைப்பர் சோமியா’Axis Hypersomnia என்றும் விநோத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த தூக்க நோயினை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். இதனால் வருடத்தில் 300 நாட்கள் தூங்கியே கழிக்கிறார் புர்காராம்.

மாதத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வியாபாரம் செய்து சம்பாதிப்பதால் குடும்பம் வருமானத்திற்கு வழியில்லாமல் அவதிப்பட்டு வருகிறது.