300 சவரன் நகை வழிப்பறி – 2 காவலர்கள் உள்பட 7 பேர் கைது

 

300 சவரன் நகை வழிப்பறி –  2 காவலர்கள் உள்பட 7 பேர் கைது

காஞ்சிபுரம்

ஶ்ரீபெரும்புதூர் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் 300 சவரன் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் காவலர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருவள்ளூரை சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் மகேந்திரன்(52). இவர் கடந்த 17ஆம் தேதி காஞ்புரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூருக்கு ஆட்டோவில் சென்றபோது, மர்மநபர்கள் கத்திமுனையில் 300 சவரன் தங்க நகையை பறித்துச்சென்றனர்.

300 சவரன் நகை வழிப்பறி –  2 காவலர்கள் உள்பட 7 பேர் கைது

இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக, ஶ்ரீபெருமபுதூர் ஏஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் மானாமதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் தமிழ் மற்றும் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர் கதிர் உள்ளிட்ட 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, காவலர்கள் கதிர், தமிழ் உள்ளிட்ட 7 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 350 கிராம் தங்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.