சென்னை அருகே 300 கிலோ குட்கா பறிமுதல்!

 

சென்னை அருகே 300 கிலோ குட்கா பறிமுதல்!

சென்னை அருகே 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையிலான தனிப்படை போலீசார் குட்கா பதுக்கிய முருகனை கைது செய்தனர். இவருக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்வது ? இதில் யார் யார் உடந்தை என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அருகே 300 கிலோ குட்கா பறிமுதல்!

குட்கா பறிமுதலும், பதுக்கலும் சில மாதங்களாகவே வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலந்தூர் கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அருகே 300 கிலோ குட்கா பறிமுதல்!

அதேபோல் கடந்த மாதம் பெங்களூரிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.