“என்ன பார்த்து அப்படி கேக்கலாமா?” -பக்கத்து வீட்டு காரரை செருப்பால் அடித்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்.

 

“என்ன பார்த்து அப்படி கேக்கலாமா?” -பக்கத்து வீட்டு காரரை செருப்பால் அடித்த பெண்ணுக்கு  நடந்த விபரீதம்.

பக்கத்து வீட்டுக்காரரிடம் வாங்கிய கடனை திருப்பி தராத பெண்ணை, அவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது 

“என்ன பார்த்து அப்படி கேக்கலாமா?” -பக்கத்து வீட்டு காரரை செருப்பால் அடித்த பெண்ணுக்கு  நடந்த விபரீதம்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின்  குண்டலஹள்ளி பகுதியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அலீம் பிபி என்ற 30 வயதான பெண் வசித்து வந்தார்.அவர் தனது பக்கத்து வீட்டுக்காரரான சேலை வியாபாரம் செய்யும் ரபீக் உல் ஷேக்கிடம் 10000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார் .அதனால் ஷேக் அந்த பெண்ணிடம் அடிக்கடி தன்னிடம்  வாங்கிய கடனை  தருமாறு கேட்டார் .ஆனால் அந்த பெண் அவரிடம் வாங்கிய கடனில் 5000 ரூபாய் மட்டுமே  கொடுத்து விட்டு மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார் .இதனால் கோபமடைந்த ஷேக், அந்த பிபி யிடம் மீண்டும் மீதி கடன் தொகையை கேட்டுள்ளார் .அப்போது அந்த பெண் பீபீ​​ ஏற்கனவே முழுத் தொகையையும் திருப்பித் தந்ததாகக் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையில் அவரை பீபீ செருப்பால் அடித்துள்ளார் .அதனால் மிகவும் கோபமுற்ற ஷேக் அந்த பெண்ணை பழி தீர்க்க சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருநதார் .

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த பெண் அங்குள்ள ப்ரூக்ஃபீல்டு பகுதிக்கு சென்றார் ,அங்கு ஏற்கனவே தயாராக காத்திருந்த ஷேக் அந்த பெண்ணை பொது மக்கள் முன்னிலையில் தான் கொண்டு வந்திருந்த

 கத்தியால் குத்தினார்,இந்த கத்தி குத்து தாக்குதலில் அந்த பெண் பீபீ சம்பவ இடத்திலேயே இறந்தார் . பின்னர் அவரை தாக்கிய ஷேக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு போலீசாருக்கு இந்த கொலை பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது .அதன் பிறகு ஷேக் மீது கொலை வழக்கு பதிவு செய்து , அவரை  கைது செய்ய போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.

“என்ன பார்த்து அப்படி கேக்கலாமா?” -பக்கத்து வீட்டு காரரை செருப்பால் அடித்த பெண்ணுக்கு  நடந்த விபரீதம்.