தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை!

 

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள மயிலைநகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் கும்பகோணத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று மயிலைநகர் திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளை!

உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து 30 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்த போலீசார், அங்கு தடயங்களை சேகரித்தனர். மேலும், சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.