புழல் சிறைக்குள் நுழைந்த கொரோனா! 30 கைதிகளுக்கு நோய் தொற்று உறுதி…

 

புழல் சிறைக்குள் நுழைந்த கொரோனா! 30 கைதிகளுக்கு நோய் தொற்று உறுதி…

சென்னை புழல் மத்திய சிறையில் 94 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புழல் சிறையில் தண்டனை பிரிவில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 94 கைதிகள் மற்றும் 19 சிறைக்காவலர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புழல் சிறையில் இருந்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளுக்கு சென்ற 5 கைதிகளுக்கு கொரோனா உறுதியானதால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் இன்று 30 கைதிகளுக்கு கொரோனா உறுதியானதால் சிறையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

புழல் சிறைக்குள் நுழைந்த கொரோனா! 30 கைதிகளுக்கு நோய் தொற்று உறுதி…

பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளது உடல்நலனும், மனநலனும் மிகவும் குன்றியிருக்கும் சூழலில் சிறைக்குள் நோய்த்தொற்று பரவினால் கைதிகளில் உயிருக்கே அச்சுறுத்தலாய் முடியும் பேராபத்து இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.