மிருகங்களுக்குக் கடுமையான தண்டனை! – ராமதாஸ் வலியுறுத்தல்

 

மிருகங்களுக்குக் கடுமையான தண்டனை! – ராமதாஸ் வலியுறுத்தல்

வேலூர் அருகே பள்ளி மாணவியை வீடியோ எடுத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

மிருகங்களுக்குக் கடுமையான தண்டனை! – ராமதாஸ் வலியுறுத்தல்இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

http://


இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “வேலூர் அருகே 3 மனித மிருகங்களால் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகி தீக்குளித்த 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://


மாணவியைத் தவறாக படம் பிடித்து பாலியல் இச்சைக்கு இணங்கும்படி அச்சுறுத்திய அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள். மிருகங்களுக்கு இணையான அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்!” என்று கூறியுள்ளார்.