‘சாலை விபத்தில் சிறுவன் தலை நசுங்கி உயிரிழப்பு’ : தாய் கண் முன்னே நடந்த சோகம்!

 

‘சாலை விபத்தில் சிறுவன் தலை நசுங்கி உயிரிழப்பு’ : தாய் கண் முன்னே நடந்த சோகம்!

மதுரை அருகே அடையாளம் தெரியாத கார் மோதி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அழகர்கோவில் வெள்ளாளபட்டியில் வசித்து வரும் தம்பதி பிரசாத் – இந்துமதி. இவர்களுக்கு ஹர்ஷன்(3) என்ற மகன் இருந்தார். இந்த நிலையில், நேற்று இந்துமதி தனது உறவினரான அஜித்குமார் என்பவருடன் பைக்கில் தல்லாகுளம் பகுதியில் இருக்கும் கடைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். பைக்கின் முன் பக்கம் சிறுவனை அமரவைத்து அஜித்குமார் அழைத்துச் சென்றுள்ளார்.

‘சாலை விபத்தில் சிறுவன் தலை நசுங்கி உயிரிழப்பு’ : தாய் கண் முன்னே நடந்த சோகம்!

இவர்கள் சரியாக ரோஸ்கோர்ஸ் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, பக்கவாட்டில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியுள்ளது. இதில், பைக்கில் இருந்து சிறுவன் ஹர்ஷன், இந்துமதி மற்றும் அஜித்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். அச்சமயம் சற்றும் எதிர்பாராத விதமாக, எதிரே வந்த லாரி ஒன்று சிறுவனின் தலை மீது ஏறியதால், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தை நேரில் பார்த்த தாய், கதறி அழுத சம்பவம் கலங்க வைத்துள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு காயமடைந்த இந்துமதி மற்றும் அஜித் குமாரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும், அதிவேகமாக சென்ற கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.