டிவி தலையில் விழுந்ததில் 3 வயது குழந்தை பலி: சார்ஜரில் இருந்த செல்போனை எடுக்க சென்ற போது ஏற்பட்ட பரிதாபம்!

 

டிவி தலையில் விழுந்ததில் 3 வயது குழந்தை பலி: சார்ஜரில் இருந்த செல்போனை எடுக்க சென்ற போது ஏற்பட்ட பரிதாபம்!

அலமாரியில் இருந்த டிவி தலையில் விழுந்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் அகரம் பகுதியில் வசிப்பவர் பாலாஜி. இவரது 3 வயது குழந்தை கவியரசு. நேற்று இரவு பாலாஜியின் செல்போன் சார்ஜரில் போடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

டிவி தலையில் விழுந்ததில் 3 வயது குழந்தை பலி: சார்ஜரில் இருந்த செல்போனை எடுக்க சென்ற போது ஏற்பட்ட பரிதாபம்!

அப்போது திடீரென செல்போன் அழைப்பு காரணமாக செல்போன் ஒலிக்க, குழந்தை கவியரசு ஓடிபோய் செல்போனை எடுக்க முயன்றுள்ளார். அப்போது செல்போன் சார்ஜர் வயர் மாட்டி அலமாரியில் இருந்த டிவி குழந்தை தலையில் விழுந்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த குழந்தையை ஆம்புலன்ஸ் உதவியுடன் தந்தை பாலாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

டிவி தலையில் விழுந்ததில் 3 வயது குழந்தை பலி: சார்ஜரில் இருந்த செல்போனை எடுக்க சென்ற போது ஏற்பட்ட பரிதாபம்!

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலையூர் போலீசார் குழந்தை இறந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.