ஜோலார்பேட்டை அருகே 3 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

ஜோலார்பேட்டை அருகே 3 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே ரயில் மூலம் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, நாட்டறம்பள்ளி வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்திற்கு வருவாய்துறையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

ஜோலார்பேட்டை அருகே 3 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!

அப்போது, ரயிலில் கடத்துவதற்காக நடைமேடையில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசிகள் அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, 70 மூட்டைகளில் இருந்த 3 டன் ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.