ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

 

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

அனந்த்நாக்: ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மூன்று தீவிரவாதிகள் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை முடிவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் சம்பவ இடத்திலிருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டது. முன்னதாக கடந்த ஜூன் 26 அன்று புல்வாமா மாவட்டத்தின் டிராலில் உள்ள சேவா உல்லர் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.