மகாராஷ்டிராவில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து – 10 பேர் உடல்நசுங்கி பலி
Sep 21, 2020, 08:48 IST1600658299000
மகாராஷ்டிராவில் அடுக்குமாடி சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் படேல் காம்பவுண்ட் பகுதியில் இருந்த 3 மாடி கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேசிய மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 10 பேரை சடலமாக மீட்டனர். மேலும் காயங்களுடன் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள சுமார் 25 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.