கொரோனாவால் உயிரிழக்கும் காவலர்கள்… சென்னையில் அதிர்ச்சி!

 

கொரோனாவால் உயிரிழக்கும் காவலர்கள்… சென்னையில் அதிர்ச்சி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 13,776 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 78 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 95,048 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் சென்னையில் தான் அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டுமே 3,727 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

கொரோனாவால் உயிரிழக்கும் காவலர்கள்… சென்னையில் அதிர்ச்சி!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அதில், சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்த நிலையில், அண்ணா நகர் போக்குவரத்து விசாரணைப் பிரிவில் பணியாற்றி வந்த காவலர் எஸ்.மகாராஜன் கொரோனாவால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை திடீரென உயிரிழந்தார். இவரது மரணம் காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கோட்டூர்புரம் உளவுப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்த கருணாநிதி(48) மற்றும் சென்னையில் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த எஸ்.முருகேசன்(51) ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.