காளையார்கோவில் அருகே சொகுசு கார் கவிழ்ந்து விபத்து – மூவர் பலி, 8 பேர் படுகாயம்!

 

காளையார்கோவில் அருகே சொகுசு கார் கவிழ்ந்து விபத்து – மூவர் பலி, 8 பேர் படுகாயம்!

சிவகங்கை

காளையார்கோவில் அருகே சொகுசு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர், இன்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு, சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அடுத்த உழவூரணி பகுதியில் வளைவில் திருப்ப முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

காளையார்கோவில் அருகே சொகுசு கார் கவிழ்ந்து விபத்து – மூவர் பலி, 8 பேர் படுகாயம்!

இந்த விபத்தில், காரில் பயணித்த ஆறுமுகம், அல்லிராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ராஜா உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காளையார்கோவில் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.