சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

 

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

சென்னை யானைகவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற யானைகவுனி போலீசார், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

தந்தை தலில் சந்த், தாய் புஷ்பா பாய் மற்றும் மகன் சீத்தல் ஆகிய 3 பேர் கொலை பேர் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட தலில்சந்த் ராஜஸ்தான் மாநிலம் பிரோகி ஜவான் கிராமத்தை சேரந்தவர் என்பதும் சென்னை சவுக்கார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. தலில்சந்த் மகள் பிங்கி இரவு சுமார் 7.20 மணிக்கு தனது தந்தை வீட்டிற்கு வந்து பார்த்த போது 3 பேரும் மெத்தையில் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மூவரின் மரணம் தொடர்பாக உறவினர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் பிங்கி தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த தெருவிற்கு பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காமல், முன்னதாகவே காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.