அறிகுறி ஏதும் இல்லாமல் ஒரே நாளில் 3 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

 

அறிகுறி ஏதும் இல்லாமல் ஒரே நாளில் 3 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்தது. அதில் சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 1,438 பேர் பாதிக்கப்பட்டனர்.

அறிகுறி ஏதும் இல்லாமல் ஒரே நாளில் 3 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

ஏற்கனவே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னையின் பாதிப்பு எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்திருக்கிறது. இருப்பினும் கொரோனாவில் இருந்து மீண்டு 26,782 குணமாகி வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் 49 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களுள் எந்த வித அறிகுறியும் இல்லாமல் 3 பேர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை எந்த வித அறிகுறியும் இல்லாமல் 55 பேர் உயிரிழந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.