சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்.. கொரோனாவால் இன்று 3 பேர் உயிரிழப்பு!

 

சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்.. கொரோனாவால் இன்று 3 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில் தான் இருக்கின்றனர். இதனால் அங்கு சிகிச்சை அளிக்க தட்டுப்பாடு நிலவுவதால், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் சென்னை முழுவதும் கொரோனா சிகிச்சை அளிக்க முதுநிலை மருத்துவம் படித்து முடித்த 1000 மருத்துவர்கள் கூடுதலாக சென்னையில் பல்வேறு பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடநத சில நாட்களாக கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், சென்னையில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது.

சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்.. கொரோனாவால் இன்று 3 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 50 வயது ஆண் இன்று உயிரிழந்துள்ளார். அதே போல கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 87 வயது முதியவரும் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 77 வயது முதியவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.