மதுரை கோயிலில் சிலைகளை திருடிய 3 பேர் கைது!

 

மதுரை கோயிலில் சிலைகளை திருடிய 3 பேர் கைது!

மதுரை சிம்மக்கல் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான பேச்சியம்மன் கோவிலிருந்து விநாயகர் சிலை, குதிரையுடன் அய்யனார் சிலை, பொன்னார் சங்கர் சிலை என 3 ஐம்பொன்சிலைகள், குத்துவிளக்கு போன்றவை திருடப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, செல்லூரை சேர்ந்த ஜெயராமன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

 

மதுரை கோயிலில் சிலைகளை திருடிய 3 பேர் கைது!

அப்போது அவர் சிலைகளை திருடி அனுப்பானடியை சேர்ந்த முகம்மது முஸ்தா(47), புது மீனாட்சிபுரம் கேட்லாக் ரோடு பகுதியை சேர்ந்த செபஸ்தீயான்(49) ஆகியோரிடம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிலை திருட்டில் 3 பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.