‘ஜீவனாம்சம் தகராறு’ கணவனின் குடும்பத்தை போட்டுத் தள்ளிய மனைவி உட்பட 3 பேர் கைது!

 

‘ஜீவனாம்சம் தகராறு’ கணவனின் குடும்பத்தை போட்டுத் தள்ளிய மனைவி உட்பட 3 பேர் கைது!

சென்னை சவுகார்பேட்டையில் கணவன் உட்பட 3 பேரை சுட்டுக் கொலை செய்த மனைவியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சவுகார்பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த தலில்சந்த் அவரது மனைவி புஷ்பா மற்றும் மகன் ஷீத்தல் நேற்று முன்தினம் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்தனர். அவர்கள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஷீத்தல் தனது மனைவி ஜெபமாலாவுடனான கருத்து வேறுபாட்டால் 5 ஆண்டுகளாக பெற்றோர்களுடன் வசித்து வருவதாகவும் ஜீவனாம்சம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்ததாகவும் தெரிய வந்தது.

‘ஜீவனாம்சம் தகராறு’ கணவனின் குடும்பத்தை போட்டுத் தள்ளிய மனைவி உட்பட 3 பேர் கைது!

மேலும் ஜெபமாலாவும் அவரது கூட்டாளிகளும் இந்த 3 பேரை கொலை செய்து விட்டு வேறு ஊருக்கு தப்பியோடியதும், கொலைக்கு நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயமாலா உள்ளிட்ட குற்றவாளிகளை பிடிக்க சென்னை போலீசார் தனிப்படை அமைத்திருந்தனர்.

‘ஜீவனாம்சம் தகராறு’ கணவனின் குடும்பத்தை போட்டுத் தள்ளிய மனைவி உட்பட 3 பேர் கைது!

இந்த நிலையில், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற ஜெபமாலா உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்த கொலை தொடர்பாகவும், துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெபமாலாவுடன் கைது செய்யப்பட்ட இருவரும் அவரது சகோதரர்கள் என கூறப்படுகிறது.