விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

 

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல்.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமானம் மூலம் கேரளா வந்த அந்த விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது ஓடுதளத்தில் விபத்து ஏற்பட்டது. சக்கரத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 30க்கு மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கேரள முதல்வர் பிரனாரயி விஜயன் உத்தரவுப்படி மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.

10 கைக்குழந்தைகள், 6 பணியாளர்கள், 2 விமானிகள், 184 பயணிகள் என 191 பேர் பயணித்துள்ளனர். விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல்.