‘சிறுமிகளை கொத்தடிமைகளாக்கி வன்கொடுமை’ – அடுத்தடுத்து சிக்கும் குற்றவாளிகள்!

 

‘சிறுமிகளை கொத்தடிமைகளாக்கி வன்கொடுமை’ – அடுத்தடுத்து சிக்கும் குற்றவாளிகள்!

புதுச்சேரியில் 5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் சிலர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர்.

‘சிறுமிகளை கொத்தடிமைகளாக்கி வன்கொடுமை’ – அடுத்தடுத்து சிக்கும் குற்றவாளிகள்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி சாத்தமங்கலம் பகுதியில் வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்ட, 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன் உட்பட மேலும் 3 பேர் கைதாகியுள்ளனர்.

‘சிறுமிகளை கொத்தடிமைகளாக்கி வன்கொடுமை’ – அடுத்தடுத்து சிக்கும் குற்றவாளிகள்!

இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து பேசிய அதிகாரி ஆனந்த், இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்துகிறது என்றும் விசாரணை முடிந்ததும் அறிக்கையை டெல்லியில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டிருக்கும் 9 பேர் அல்லாது மற்ற சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.