கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது!

 

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது!

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்கக் கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது.

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது!

தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனையடுத்து தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் கொச்சியில் உள்ள என். ஐ. ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஸ்வப்னா சுரேஷ்க்கு மற்றும் சந்தீப் நாயருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று ஸ்வப்னாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ வுக்கு நீதிமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது!

இந்நிலையில் கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஸ்வப்னா உள்ளிட்ட இருவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ள நிலையில், தற்போது எர்ணாகுளம் ஜலால், கொண்டாட்டி ஹம்ஜத் அலி, மலப்புரம் முகமது ஷபி ஆகிய 3 பேரை கொச்சி சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தை 3 பேரும் விற்று வந்ததாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரும் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.