கோயம்பேடு மார்க்கெட்டில் 3 மாத பெண் குழந்தை கடத்தல்!

 

கோயம்பேடு மார்க்கெட்டில் 3 மாத பெண் குழந்தை கடத்தல்!

கோயம்பேடு மார்க்கெட் அருகே 3 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மார்க்கெட்டிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை ரமேஷின் 3 மாத பெண் குழந்தையை மர்ம கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் 3 மாத பெண் குழந்தை கடத்தல்!

இது தொடர்பாக, கோயம்பேடு காவல்நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனையடுத்து, அண்ணாநகர் துணை ஆணையரிடம் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் மெரினா கடற்கரையில் தங்கியிருந்த குறவர்களின் பெண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே போல சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.