ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா! நேற்று மருத்துவமனையில் அனுமதி… இன்று மூவரும் இறப்பு…

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா! நேற்று மருத்துவமனையில் அனுமதி… இன்று மூவரும் இறப்பு…

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,25,391 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று மட்டும் 62 பேர் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா! நேற்று மருத்துவமனையில் அனுமதி… இன்று மூவரும் இறப்பு…

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராதா செட்டியார் (88), இவரது மனைவி சீதாலட்சுமி (80) மற்றும் இவர்களது மகன் ராமு (58) ஆகிய மூன்று பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மூவரும் இன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமு சந்தூர் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் கொரோனாவால் உயிரிழந்தது, அந்த கிராமத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மூவரிடன் உடலும் கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் இன்று மதியம் அடக்கம் செய்யப்பட்டனர்.